மேட்டுப்பாளையம்-கோவை இடையே பயணிகள் தினசரி ரயில் சேவையை நேற்று ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
கோவை முதல் மேட்டுப்பாளையம் வரை இயக்கப்படும் மின்சார பயணிகள் ரயில் ஞாயிற்றுக்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு ஐந்து முறையும், கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு ஐந்து முறையும் இயக்கப்பட்டு வந்தது. இதனை மேட்டுப்பாளையம், சுற்று வட்டார பகுதி மக்கள் ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த பயணிகள் ரயிலை ஞாயிற்றுக்கிழமையும் இயக்க கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. அது ஏற்கப்பட்டு இந்த தினசரி ரயில் சேவையின் துவக்க விழா நேற்று மாலை மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் நடைபெற்றது. மாலை 4.45 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு ரயில் சேவையை ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.