கடந்த மே 20 ம் தேதி, தைவான் நாட்டின் புதிய அதிபராக லாய் சிங் டே பொறுப்பேற்றுள்ளார். டெமாக்ரடிக் புரோகிரஸிவ் பார்ட்டி கட்சியை சேர்ந்த அவருக்கு திபெத் நாட்டின் ஆன்மீக தலைவர் தலாய் லாமா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜனநாயக கோரிக்கைகளை வலியுறுத்தி சீனாவில் இருந்து பிரிந்து தைவான் நாடு இயங்கி வருகிறது. இந்த நிலையில், ஜனநாயகத்தில் வேரூன்றி இருக்கும் தைவான் மக்களை தலாய் லாமா பாராட்டி உள்ளார். மேலும், தைவான் நாட்டின் ஐந்தாவது அதிபராக பொறுப்பேற்றுள்ள லாய், தைவான் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள அனைத்து சவால்களையும் நம்பிக்கையோடு தகர்த்தெறிவார் என கூறியுள்ளார்.