புத்த மத ஆன்மீகத் தலைவராக அமெரிக்காவில் பிறந்த 8 வயது மங்கோலிய சிறுவன் அறிவிப்பு - தலாய் லாமா

March 28, 2023

புத்த மதத்தின் 3வது பெரிய ஆன்மீகத் தலைவராக, அமெரிக்காவில் பிறந்த 8 வயது மங்கோலிய சிறுவன் அறிவிக்கப்பட்டுள்ளார். புத்த மதத் தலைவர் தலாய் லாமா, சிறுவனைத் தலைவராக நியமித்து அறிவித்துள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு, கால்கா ஜெட்ஸுன் தாம்பா ரின்போச்சேவின் 10வது மறுபிறவியாக இந்த சிறுவனை தலாய் லாமா அங்கீகரித்தார். சிறுவனுக்கு அதன் பெயரிலேயே கடந்த பிப்ரவரி மாதத்தில் பட்டம் சூட்டப்பட்டது. முன்னதாக, கால்கா ஜெட்ஸுன் தாம்பா ரின்போச்சேவின் 9வது மறுபிறவியாக அறிவிக்கப்பட்டவர் கடந்த 2012 […]

புத்த மதத்தின் 3வது பெரிய ஆன்மீகத் தலைவராக, அமெரிக்காவில் பிறந்த 8 வயது மங்கோலிய சிறுவன் அறிவிக்கப்பட்டுள்ளார். புத்த மதத் தலைவர் தலாய் லாமா, சிறுவனைத் தலைவராக நியமித்து அறிவித்துள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு, கால்கா ஜெட்ஸுன் தாம்பா ரின்போச்சேவின் 10வது மறுபிறவியாக இந்த சிறுவனை தலாய் லாமா அங்கீகரித்தார். சிறுவனுக்கு அதன் பெயரிலேயே கடந்த பிப்ரவரி மாதத்தில் பட்டம் சூட்டப்பட்டது.

முன்னதாக, கால்கா ஜெட்ஸுன் தாம்பா ரின்போச்சேவின் 9வது மறுபிறவியாக அறிவிக்கப்பட்டவர் கடந்த 2012 ஆம் ஆண்டு இறந்தார். இதில் சீனாவின் சதி உள்ளதாக கருதப்படும் நிலையில், அவரது குடும்பத்தினர் இந்தியாவில் உள்ள தரம்சாலாவில் வசித்து வருகின்றனர். தற்போது, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆன்மீகத் தலைவருக்கு சீனாவால் அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதால், அவரது குடும்பம் குறித்த தகவல் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. மேலும், மங்கோலிய சிறுவனை நியமித்ததன் மூலம், திபெத் தொடர்பான தன் அரசியல் போராட்டத்தை தலாய் லாமா தொடர்ந்து மேற்கொள்வார் என்று கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu