இந்தியாவின் முன்னணி சிமெண்ட் உற்பத்தியாளரான டால்மியா சிமெண்ட் நிறுவனம், அசாம் அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் ஈடுபட்டு உள்ளது. அதன்படி, அசாம் மாநிலத்தில் 4600 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. அங்கு, தனது சிமெண்ட் வர்த்தகத்தை விரிவாக்கும் நோக்கில் இந்த முதலீடு செய்யப்பட்டுள்ளதாக, டால்மியா சிமெண்ட் தெரிவித்துள்ளது. மேலும், இந்த திட்டத்தின் மூலம், 2500 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுவதாக கூறியுள்ளது.
டால்மியா சிமெண்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மகேந்திர சிங்கி மற்றும் அசாம் மாநில முதலமைச்சர் ஹிமான்டா பிஸ்வா சர்மா ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த திட்டம் தொடர்பாக இருவரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மேலும், இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் இந்த திட்டத்தின் மூலம் வளர்ச்சிகள் ஏற்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.