டன்சோ துரித வர்த்தக நிறுவனத்தின் இணை தோற்றுநர் டல்விர் சூரி நிறுவனத்திலிருந்து வெளியேறுகிறார்.
நஷ்டத்தில் இயங்கி வரும் டன்சோ நிறுவனத்தில், மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் பகுதியாக, டல்விர் சூரி நிறுவனத்தை விட்டு வெளியேறுவதாக தகவல் வெளிவந்துள்ளது. நடப்பு காலாண்டு முதல் அவர் வெளியேறுவார் என கூறப்பட்டுள்ளது. கடும் நிதிச் சுமையில் உள்ள டன்சோ நிறுவனம், நிகழாண்டில் ஏற்கனவே மூன்று முறை பணி நீக்கத்தை அறிவித்துள்ளது. மேலும், பல்வேறு நிறுவனங்களில் இருந்து நிதி உதவியை எதிர்பார்த்து உள்ளது. இந்த நிலையில் டல்விர் சூரியின் விலகல் முக்கியமாக பார்க்கப்படுகிறது.