சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள வீரர்களை பூமிக்கு அழைத்து வருவதற்காக, ரஷ்யாவின் சோயுஸ் எம் எஸ் 22 விண்கலம் அனுப்பப்பட்டது. ஆனால், கடந்த டிசம்பர் மாதத்தில், இந்த விண்கலத்தில் கசிவு ஏற்படவே, மாற்று விண்கலம் அனுப்பப்பட்டு வீரர்கள் பூமிக்கு திரும்பினர். தற்போது, இந்த விண்கலம் ஆளில்லாமல் பூமி வந்தடைந்துள்ளது. சேதமடைந்த நிலையில் இருந்தாலும், விண்கலம் பத்திரமாக தரை இறங்கி உள்ளதாக விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை அன்று, கசகஸ்தான் நாட்டில், உள்ளூர் நேரப்படி, மாலை 5:46 மணி அளவில் இந்த விண்கலம் தரையிறங்கியது .இந்த விண்கலத்தை ரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்காஸ்மோஸ் ஆய்வு செய்து வருகிறது. மேலும், இந்த விண்கலத்தில் 218 கிலோகிராம் எடையுள்ள பொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இவை சர்வதேச விண்வெளி நிலையத்தில் நடத்தப்பட்ட அறிவியல் ஆய்வுகளின் முடிவுகள் ஆகும்.