தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஈகுவடார் நாட்டில், அண்மையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், டேனியல் நோபா வெற்றி பெற்றுள்ளார். நாட்டின் இளம் அதிபராக அவர் பதவியேற்க உள்ளார். தற்போதைய நிலையில், 35 வயதாகும் அவர், கிட்டத்தட்ட 52% வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை முதல் புதிய ஈகுவடாரின் செயல்பாடுகள் தொடங்கும் என தனது வெற்றி குறித்து டேனியல் நோபா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும், ஈகுவடார் நாட்டை, வன்முறை, ஊழல், வெறுப்பு ஆகியவற்றிலிருந்து காப்பாற்றி, மறுஆக்கம் செய்வதில் முனைப்புடன் செயல்பட உள்ளதாக கூறியுள்ளார். தற்போதைய நிலையில், ஈகுவடார் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பெரிய சவால் அவர் முன்னால் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.