டிபிஎஸ் வங்கியின் இந்தியப் பிரிவு நிர்வாக அதிகாரியாக, ராஜத் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இவர், இதற்கு முன்னதாக, ஹெச் எஸ் பி சி வங்கியின் நிர்வாக அதிகாரியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஏற்கனவே டிபிஎஸ் வங்கியின் நிர்வாக பதவியிலிருந்த நீரஜ் மிட்டல், டிபிஎஸ் வங்கியின் ஆஸ்திரேலிய பிரிவின் தலைமை பொறுப்புக்கு செல்ல உள்ளதால், அந்த பதவிக்கு ராஜத் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளிவந்துள்ளது.
இந்தியாவில் இயங்கி வரும் மிகப் பெரிய வெளிநாட்டு வங்கியாக டி பி எஸ் உள்ளது. மேலும், இந்தியாவில் தனது வங்கி நடவடிக்கைகளை மேலும் விரிவாக்கி, முன்னிலை இடத்தை அடைவதை இலக்காகக் கொண்டு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், ராஜத் வர்மாவின் நியமனம் மிகவும் முக்கியமான சமயத்தில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.