இந்தோனேசியாவின் முக்கிய தீவான ஜாவாவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து, அதன் காரணமாக நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் 10 பேர் உயிரிழந்தனர் மற்றும் 2 பேர் காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேற்கு ஜாவாவின் சுகாபூமி மாவட்டத்தில், தொடர் மழையின் காரணமாக மலையோர குக்கிராமங்களில் மண், பாறைகள் மற்றும் மரங்கள் இடிந்து விழுந்து 170க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆறுகள் கரைபுரண்டுள்ளன. இந்த விபத்தில் 172 கிராமங்கள் அழிந்துள்ளன மற்றும் 3,000க்கும் மேற்பட்ட மக்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழையால் 31 பாலங்கள், 81 சாலைகள் மற்றும் 539 ஹெக்டேர் நெல் வயல்கள் அழிந்துள்ளது. மீட்பு பணியில் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.