நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க மார்ச் 16ஆம் தேதி வரை கூடுதல் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்காக நீட் தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவ படிப்புகளுக்கு தனி தனியாக நீட் தேர்வு நடைபெற்று வருகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 5ம் தேதி நடைபெற உள்ளது. இதன் முடிவுகள் ஜூன் 14ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில் நீட் தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான காலம் பிப்ரவரி 9ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற இருந்தது. இந்நிலையில் இதற்காக விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மார்ச் 16ஆம் தேதி வரை நீட்டித்து தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. அதன்படி மார்ச் 16ஆம் தேதி இரவு 10.50 மணி வரை விண்ணப்பிக்கலாம். 11.50 மணி வரை விண்ணப்ப கட்டணம் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.