அமெரிக்கா தற்போது கடுமையான நீர் மாசு பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறது. E. coli மற்றும் cyanobacteria போன்ற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் ஏரிகள் மற்றும் ஆறுகளில் அதிக அளவில் பரவியதால், பல கடற்கரைகள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலைக்கு வெப்பமான காலநிலை மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் கடுமையான மழை முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது.
E. coli மற்றும் cyanobacteria போன்ற பாக்டீரியாக்கள் கடுமையான உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும். மாசசூசெட்ஸ், லேக் தஹோ போன்ற முன்னர் பாதிக்கப்படாத பகுதிகள் கூட இந்த முறை பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 2010 மற்றும் 2020 க்கு இடையில், இந்த பிரச்சனையை தடுக்க $1 பில்லியனுக்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ள நிலையில், தற்போது அமெரிக்க சுற்றுலா துறையின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இது மாறியுள்ளது. இந்த பிரச்சனையை எதிர்த்து போராட புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மாசு மற்றும் கார்பன் உமிழ்வை குறைப்பது மிகச் சிறந்த நீண்ட கால தீர்வாகும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.