இந்தோனேசியாவில் உள்ள ரியாவ் தீவுகளில், கடந்த மார்ச் 6ம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 33 பேர் மாயமாகி உள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. சம்பவ இடத்தில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. உயிரிழந்தோரில் 21 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
திங்கட்கிழமை ஏற்பட்ட இந்த நிலச்சரிவில், சுமார் 1300 பேர் தங்கள் வீடுகளை இழந்து வெளியேறி உள்ளதாக இந்தோனேசியாவின் தேசிய பேரிடர் மேலாண்மை தெரிவித்துள்ளது. அதிகப்படியான மழை பொழிவு காரணமாக, இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக இயற்கை பேரிடர் முகமை தெரிவித்துள்ளது. இப்பகுதியில், தொடர்ந்து மழை பொழிவு காணப்படுவதால், கடும் சிரமத்துடன் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.