இந்தோனேசியாவின் முக்கிய தீவு ஜாவாவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.
மழை காரணமாக நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டதில் 19 பேர் பலியாகியுள்ளனர். தற்போது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த மேலும் 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதால், பலி எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. 13 பேர் காயமடைந்துள்ளனர். மேற்கு ஜாவாவின் பெக்கலோங்கன் பகுதியில் 9 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், மழை காரணமாக மலையோர கிராமங்களில் மண், பாறைகள் மற்றும் மரங்கள் இடிந்து விழுந்து ஆறுகள் கரைபுரண்டு ஓடுகின்றன. காணாமல் போன 8 பேரை தேடும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.