மெக்சிகோ - சிறையில் நடந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு

January 3, 2023

மெக்சிகோவில், சிறையில் உள்ள போதை மருந்து கடத்தல் கும்பல்கள் இடையே கலவரம் வெடித்து கைதிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அன்று சியுடாட் ஜூவாரஸ் சிறைச்சாலைக்கு கவச வாகனங்களில் வந்த கும்பல் திடீர் தாக்குதலில் ஈடுபட்டது. காவலர்களுக்கும் அந்த கும்பலுக்கும் இடையே நடந்த தாக்குதலில் 14 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்ட்டது. மேலும், சிறையில் இருந்து 27 கைதிகள் தப்பி ஓடியதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. […]

மெக்சிகோவில், சிறையில் உள்ள போதை மருந்து கடத்தல் கும்பல்கள் இடையே கலவரம் வெடித்து கைதிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அன்று சியுடாட் ஜூவாரஸ் சிறைச்சாலைக்கு கவச வாகனங்களில் வந்த கும்பல் திடீர் தாக்குதலில் ஈடுபட்டது. காவலர்களுக்கும் அந்த கும்பலுக்கும் இடையே நடந்த தாக்குதலில் 14 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்ட்டது. மேலும், சிறையில் இருந்து 27 கைதிகள் தப்பி ஓடியதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. 10 சிறை காவலர்களும், 7 கைதிகளும் இந்த தாக்குதலில் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் லாஸ் மெக்சிகல்ஸ் என்ற கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணையில் மெக்சிகோ காவல்துறை ஈடுபட்டுள்ளது. மேலும், சிறையில் இருந்து கைபேசிகள், ஆயுதங்கள், போதைப் பொருட்கள் மற்றும் அதிக அளவிலான ரொக்கப் பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu