ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் கடுமையான வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத்தில் நேற்று சட்டமன்றம் துவங்கியதும், மக்களவை எம்.பி. ரஷித்தின் சகோதரர் 370 தற்காலிக பிரிவுக்கு ஆதரவு தெரிவிக்கும் பேனரை தூக்கி காட்டினார். இதனால், பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் கடுமையான எதிர்ப்புடன், அந்த பேனரை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். சபாநாயகர் அவர்கள் அமர்வில் இருந்து வெளியேற உத்தரவிட்டபோதும், அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த பரபரப்பை கண்டு, சபாநாயகர், பாதுகாவலர்களுக்கு எம்.எல்.ஏக்களை வெளியேற்றுமாறு உத்தரவிட்டார். பின்னர், 370 பிரிவை நீக்குவதற்கான தீர்மானத்திற்கு எதிராக உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.