சட்டசபைக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திங்கட்கிழமை சட்டசபை மீண்டும் கூட உள்ளது.
தமிழக பட்ஜெட் கடந்த 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, வேளாண் பட்ஜெட் 15 ஆம் தேதி முன்வைக்கப்பட்டது. பட்ஜெட் மீதான விவாதம் 17 ஆம் தேதி தொடங்கி 20 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பதில் அளித்து பேசினர்.
சட்டசபைக்கு இன்று (சனிக்கிழமை) மற்றும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு சட்டசபை மீண்டும் கூட உள்ளது. அந்த நாளில் முதலில் கேள்வி நேரம் நடைபெறும், பின்னர் மானியக்கோரிக்கை மீதான விவாதம் தொடங்கும். இதில் முதல் மானியக்கோரிக்கையாக நீர்வளத்துறை மற்றும் இயற்கை வளங்கள் துறை இடம்பெறுகிறது. இந்த விவாதத்தில், எம்.எல்.ஏ.க்கள் தங்களது தொகுதிகளை சார்ந்த முக்கிய கோரிக்கைகளை முன்வைப்பார்கள். அவர்களது பேச்சுக்குப் பிறகு, துறை அமைச்சர் துரைமுருகன் பதில் உரையாற்றி, துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளார்.