ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் சட்டப்பேரவை தனது வருத்தத்தை பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த திங்கள் கிழமை சட்டப்பேரவையில் தமிழ்நாடு ஆளுநர் ஆற்றிய உரையில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. தொடர்ச்சியாக அன்றையதினம் ஆளுநர் உரைக்கு பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானத்தை முன் மொழிந்து ஆளுநர் உரையில் கூடுதலாக பேசிய வார்த்தைகள் நீக்கப்படுவதாக அறிவித்தார். பேரவை அனுமதியுடன் அந்த தீர்மானமானது முழுமையாக நிறைவேற்றப்பட்டது.
3-ம் நாளான இன்று ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் விவாதித்தனர். இந்த நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை தொடங்கிவைத்து கம்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நா.ராமகிருஷ்ணன் முன் மொழிகிறார். அந்த தீர்மானத்தில் தமிழ்நாடு அரசால் அனுப்பப்பட்டு, ஆளுநரால் இசைவளிக்கப்பட்டு பேரவைக்கு வழங்கப்பட்ட உரையில் சில பகுதிகளை இணைத்தும், விடுத்தும் ஆளுநர் உரையாற்றியதற்கு இப்பேரவை வருத்தத்தை பதிவு செய்வதாக தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.