பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு 17 சதவீத ஊதிய உயர்வு வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பொதுத்துறை வங்கி ஊழியர்கள் ஊதிய உயர்வு, வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை, காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து இந்திய வங்கிகள் கூட்டமைப்பு, அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கம் இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தையில் இதுகுறித்த உடன்பாடு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு 17% உறுதி உயர்வு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு 2022 நவம்பர் 11ஆம் தேதி முதல் முன் தேதியட்டு அமலாக உள்ளது. மேலும் இந்த ஒப்பந்தம் ஐந்து ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வங்கிகளுக்கு ரூபாய் 7898 கோடி கூடுதல் செலவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.