சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளிலும் பார்க்கிங் இடங்களை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
சென்னை நகரில் தற்போது 500 பார்க்கிங் இடங்கள் உள்ளன. இதிலிருந்து அரசுக்கு சுமார் 65 லட்சம் வருமானம் மாதம் தோறும் வருகிறது. இதில் கார்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூபாய் 20-ம், இருசக்கர வாகனங்களுக்கு ரூபாய் ஐந்தும் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனை அடுத்து சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் பார்க்கிங் இடங்களை அதிகரிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இதில் டி. நகர் தணிகாசலம் சாலையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான வாகனம் நிறுத்தும் இடத்தில் ஒரு மணி நேரத்திற்கு ரூபாய் 60 ஆக கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனால் மாநகராட்சிக்கு அதிக வருவாய் கிடைத்தது. மேலும் பார்க்கிங் இடங்களை கண்டறியும் பணியில் அடுத்த மாதம் முதல் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபடுவார்கள். பின்னர் எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகம்