சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இரண்டு ஏசி மின்சார ரயில்கள் இயக்க முடிவு

March 15, 2024

இந்த ஆண்டின் இறுதிக்குள் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இரண்டு ஏசி மின்சார ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. சென்னையில் ஏசி மின்சார ரயில்கள் இயக்க பயணிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்ததை தொடர்ந்து தெற்கு ரயில்வே ஏ.சி ரயில்கள் இயக்க முடிவு செய்தது. இதன் அடிப்படையில் சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏ.சி மின்சார ரயில் இயக்குவதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில் தலா 12 ரயில் பெட்டிகள் […]

இந்த ஆண்டின் இறுதிக்குள் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இரண்டு ஏசி மின்சார ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.

சென்னையில் ஏசி மின்சார ரயில்கள் இயக்க பயணிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்ததை தொடர்ந்து தெற்கு ரயில்வே ஏ.சி ரயில்கள் இயக்க முடிவு செய்தது. இதன் அடிப்படையில் சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏ.சி மின்சார ரயில் இயக்குவதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில் தலா 12 ரயில் பெட்டிகள் கொண்ட இரண்டு மின்சார ரயில்களை தெற்கு ரயில்வேக்கு ரயில்வே நிர்வாகம் ஒதுக்கி உள்ளது. இதற்கான ஏ.சி பெட்டிகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் சென்னை - கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏ.சி மின்சார ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu