கிளாம்பாக்கத்தில் இருந்து தாம்பரம் ரயில் நிலையத்திற்கு நாளை முதல் இடைநிறுத்தம் இல்லாத பாய்ண்ட் டூ பாய்ண்ட் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
கிலாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து தாம்பரம் ரயில் நிலையத்திற்கு செல்வதற்காக பொதுமக்களின் வசதிக்காக தற்போது இயக்கப்பட்டு வரும் பேருந்துகளோடு கூடுதலாக மாநகரப் போக்குவரத்து கழகமானது எம் 18 இல் ஆறு பேருந்துகளை இடைநிறுத்தம் இல்லாத பாய்ண்ட் டூ பாய்ண்ட் பேருந்துகளாக பத்து நிமிட இடைவெளியில் இன்று காலை 3 மணியிலிருந்து இரவு பத்து மணி வரை தொடர்ந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.