ராமேசுவரம் - காசி ஆன்மீகப் பயணத்திற்கு 300 பேர் தேர்வு செய்ய முடிவு

October 30, 2023

இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கை அறிவிப்பில் 200 நபர்கள் அரசு சார்பில் ஆன்மீக பயணம் அழைத்துச் செல்லப்படுவர் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கடந்த 2022- 2023 ஆம் ஆண்டு 200 நபர்கள் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் இருந்து காசி விசுவநாதர் சுவாமி கோவிலுக்கு ஆன்மீக பயணமாக அழைத்துச் செல்லப்படுவர். இதற்கான செலவு 50 லட்சத்தை அரசு ஏற்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து 2023-2024 ஆம் ஆண்டிற்கான அறிவிப்பில் 300 நபர்கள் […]

இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கை அறிவிப்பில் 200 நபர்கள் அரசு சார்பில் ஆன்மீக பயணம் அழைத்துச் செல்லப்படுவர் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கடந்த 2022- 2023 ஆம் ஆண்டு 200 நபர்கள் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் இருந்து காசி விசுவநாதர் சுவாமி கோவிலுக்கு ஆன்மீக பயணமாக அழைத்துச் செல்லப்படுவர். இதற்கான செலவு 50 லட்சத்தை அரசு ஏற்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து 2023-2024 ஆம் ஆண்டிற்கான அறிவிப்பில் 300 நபர்கள் அழைத்து செல்ல இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும் இதற்கான 75 லட்சத்திற்கான செலவை அரசு ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஆன்மீக பயணத்திற்கு அழைத்துச் செல்ல 20 இணை ஆணையர் மண்டலங்களில், மண்டலத்திற்கு 15 நபர்கள் என 300 நபர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவர்கள் இந்து மதத்தைச் சார்ந்தவராகவும், இறை நம்பிக்கை உடையவராகவும், வயது 60 முதல் 70 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். இவர்கள் சம்பந்தப்பட்ட இணை ஆணையர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து அதை மண்டல இணை ஆணையர் அலுவலகத்திற்கு 20.11.23 அனுப்பி வைக்க வேண்டும். மேலும் இதற்கான விவரங்கள் அல்லது அலுவலகம் குறித்த தகவல்களை www.hrce.tn.govt.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu