இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் ராக்கெட் ஏவும் பணிகளுக்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி அந்த பகுதிகளை மக்கள் பயன்பாட்டுக்கு தடை விதித்து உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.
இதில் தூத்துக்குடி - திருச்செந்தூர்- கன்னியாகுமரி சாலையை ஒட்டி உள்ள படுக்கப்பத்து மற்றும் சாத்தான்குளம் தாலுகாவில் பள்ளகுறிச்சி, திருச்செந்தூர் தாலுகாவில் மாதவன் குறிச்சி உள்ளடக்கிய பகுதிகளை தேர்வு செய்துள்ளதாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
மேலும் இதன் வடக்கு எல்லையாக தாண்டவன் காடு, நாராயணபுரம் மற்றும் மாதவன் குறிச்சி கிராமங்களும், தெற்கே மன்னார் வளைகுடா, கிழக்கே மன்னார் வளைகுடா மற்றும் அமரபுரம், மணப்பாடு கிராமங்களும், மேற்கே படுக்கப்பட்டு மற்றும் எள்ளுவிளை கிராமங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.