டிரம்ப் மீதான வழக்கு தள்ளுபடி - அவதூறு வழக்கு என தீர்ப்பு

April 6, 2023

நடிகைக்கு பணம் கொடுத்தது தொடர்பாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில், அவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு, உடனடியாக ஜாமீனில் வெளிவந்தார். அவர் ஜாமீனில் வெளிவந்த பிறகு, உடனடியாக இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, டிரம்ப் மீதான இந்த குற்ற வழக்கு அவதூறு வழக்காக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் இந்த வழக்கை தள்ளுபடி செய்து, நடிகை ஸ்டோமி டேனியல்ஸ், டிரம்புக்கு ஒரு கோடி ரூபாய் வழங்க […]

நடிகைக்கு பணம் கொடுத்தது தொடர்பாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில், அவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு, உடனடியாக ஜாமீனில் வெளிவந்தார். அவர் ஜாமீனில் வெளிவந்த பிறகு, உடனடியாக இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, டிரம்ப் மீதான இந்த குற்ற வழக்கு அவதூறு வழக்காக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் இந்த வழக்கை தள்ளுபடி செய்து, நடிகை ஸ்டோமி டேனியல்ஸ், டிரம்புக்கு ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த வழக்கு தொடரப்பட்டது. அப்போது, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு, 2.4 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட போது, மேலும் 2 கோடி ரூபாய் அபராதம் ஸ்டோமிக்கு விதிக்கப்பட்டது. தற்போது, இவற்றை எதிர்த்து, கலிபோர்னியாவில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த முறையும் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு, ஒரு கோடி ரூபாய் செலுத்த தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu