பெல் நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்

February 21, 2025

இந்திய கடலோரக் காவல்படையின் செயல்திறனை மேம்படுத்தும் வகையில், மத்திய பாதுகாப்பு அமைச்சகம் பெங்களூரில் உள்ள பாரத் மின்னணு நிறுவனத்திடமிருந்து (பெல்) ரூ.1,220.12 கோடி மதிப்பிலான 149 அதிநவீன மென்பொருள் ரேடியோக்களை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. ‘முழுவதும் உள்நாட்டிலேயே வடிவமைத்தல், மேம்படுத்துதல் மற்றும் உற்பத்தி செய்தல்’ (ஐடிடிஎம்) திட்டத்தின் கீழ் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதுகாப்பான மற்றும் அதிவேக தகவல் பரிமாற்றம் மூலம் கடல்சார் தேடல், மீட்பு நடவடிக்கைகள், மீனவர் பாதுகாப்பு, கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றில் […]

இந்திய கடலோரக் காவல்படையின் செயல்திறனை மேம்படுத்தும் வகையில், மத்திய பாதுகாப்பு அமைச்சகம் பெங்களூரில் உள்ள பாரத் மின்னணு நிறுவனத்திடமிருந்து (பெல்) ரூ.1,220.12 கோடி மதிப்பிலான 149 அதிநவீன மென்பொருள் ரேடியோக்களை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. ‘முழுவதும் உள்நாட்டிலேயே வடிவமைத்தல், மேம்படுத்துதல் மற்றும் உற்பத்தி செய்தல்’ (ஐடிடிஎம்) திட்டத்தின் கீழ் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதுகாப்பான மற்றும் அதிவேக தகவல் பரிமாற்றம் மூலம் கடல்சார் தேடல், மீட்பு நடவடிக்கைகள், மீனவர் பாதுகாப்பு, கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றில் இந்த ரேடியோக்கள் முக்கியப் பங்கு வகிக்க உள்ளன.

மேலும், முப்படைகளுக்கான பாதுகாப்பு தளவாடங்களை எளிதாக மாற்றம் செய்யும் ‘ஆர்டிஎஃப்எல்டி’ என்ற அதிக எடையை தூக்கிச் செல்லும் 1,868 லாரிகளை ரூ.697.35 கோடி செலவில் ஏஸ் (ஏசிஇ) மற்றும் ஜேசிபி இந்தியா நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்தையும் பாதுகாப்பு அமைச்சகம் மேற்கொண்டுள்ளது. இது, பாதுகாப்பு நடவடிக்கைகளை மெருகூட்டும் முயற்சியில் மத்திய அரசின் மேலும் ஒரு முக்கியமான முடிவாகக் கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu