ராஜ்நாத் சிங் அமெரிக்கா பயணம் செல்லவுள்ளார்
பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் வரும் 23ம் தேதி அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரி லாயிட் ஆஸ்டின் அழைப்பின் பேரில், அவர் ஆகஸ்ட் 23 முதல் 26ம் தேதி வரை அமெரிக்காவில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தில், ராஜ்நாத் சிங், அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரி லாயிட் ஆஸ்டினையும், தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமெரிக்க அதிபரின் உதவியாளர் ஜாக் சல்லிவனையும் சந்திக்கிறார். இந்தியா-அமெரிக்கா பாதுகாப்பு கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் இந்த பயணம், அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடலாகும்.