தடையை மீறி அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி எதிர்க்கட்சிகள் பேரணி

March 15, 2023

தடையை மீறி அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி எதிர்க்கட்சிகள் பேரணி நடத்தினர். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்தே அதானி விவகாரம் மற்றும் ராகுல் காந்தியின் சர்ச்சை பேச்சு குறித்து எதிர்க்கட்சிகளும் - ஆளும் கட்சியும் மாறி மாறி அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் நாடாளுமன்றம் இன்று கூடியதும் அதானி விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பியதால் அவை நடவடிக்கை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் தலைமையில், […]

தடையை மீறி அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி எதிர்க்கட்சிகள் பேரணி நடத்தினர்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்தே அதானி விவகாரம் மற்றும் ராகுல் காந்தியின் சர்ச்சை பேச்சு குறித்து எதிர்க்கட்சிகளும் - ஆளும் கட்சியும் மாறி மாறி அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் நாடாளுமன்றம் இன்று கூடியதும் அதானி விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பியதால் அவை நடவடிக்கை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் தலைமையில், அதானி விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணை வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சிகள் பேரணியாக செல்கின்றனர்.

எதிர்க்கட்சிகளின் பேரணியை தடுக்க நாடாளுமன்றத்திற்கு வெளியே உள்ள சாலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் தடையை மீறி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் இருந்து அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி செல்கின்றனர். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பேரணியையடுத்து நாடாளுமன்ற சாலை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu