டெல்லி சட்டசபை தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
டெல்லி சட்டசபை தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் இதுவரை 981 வேட்பாளர்கள் தங்கள் மனுக்களை தாக்கல் செய்துள்ளதாக டெல்லி தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார். மொத்தமாக 1,521 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
20-ம் தேதி கடைசியாக வேட்புமனுக்கள் வாபஸ் பெறும் நாள் ஆகும். நேற்று, 680 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. புதுடெல்லி தொகுதியில், 29 வேட்பாளர்கள் 40 மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். இங்கு, ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால், பா.ஜ.க. வேட்பாளராக பர்வேஷ் வர்மா, காங்கிரஸ் வேட்பாளராக சந்தீப் தீட்சித் போட்டியிடுகின்றனர்.