உத்திரபிரதேசத்தில் கட்டப்பட்டுள்ள அயோத்தி ராமர் கோவிலுக்கு டெல்லியில் இருந்து அரண்மனை ரயில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சென்ற வண்ணம் உள்ளனர். இந்நிலையில் அயோத்தி இரத்தம் இந்தியாவின் சொகுசு ரயிலான பேலஸ் ஆன் வீல்ஸ் ரயிலை இயக்க முடிவு செய்துள்ளது. இது உலகில் முதல் 10 ஆடம்பர ரயில்களில் ஒன்றாகும். இந்த ரயில் பயணம் சுற்றுலாவிற்கு சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. மேலும் இது அரண்மனையில் இருப்பது போன்ற உணர்வைத் தரும். இந்த ரயிலானது இந்தியாவில் சில புனித நகரங்கள் வழியாக ஆறு நாள் புனித யாத்திரைக்கு பயணிகளை அழைத்துச் செல்ல உள்ளது. அதன்படி டெல்லியில் தொடங்கி வாரணாசி பிரயாக்ராஜ் வழியாக சென்று அயோத்தியில் முடிவடைகிறது. இதற்காக ரூபாய் 7 கோடியில் ரயில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இதில் யாத்திரை கட்டணமாக ஒரு நபருக்கு லட்சக்கணக்கில் இருக்கும் என தெரிய வந்துள்ளது.