அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு அரவிந்த் கெஜ்ரிவாலியின் வீட்டிற்கு சோதனை வாரண்டுடன் சென்றது.
டெல்லி அரசின் மதுபானக் கொள்கை வழக்கில் ஆஜராகும் படி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை இதுவரை எட்டு முறை சமன் அனுப்பியது. ஆனால் அவர் அவற்றை நிராகரித்து வந்தார். பின் டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜரானால் கைது செய்ய மாட்டோம் என அமலாக்கத்துறை உறுதியளிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்துள்ளார். வழக்கை விசாரித்த நீதிபதி கெஜ்ரிவால் வைத்த கோரிக்கையை நிராகரித்தார். மேலும் கோரிக்கை மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என தெரிவித்துள்ளார். இதனை அடுத்து உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 12 பேர் கொண்ட குழுவுடன் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டிற்கு சோதனை வாரண்டுடன் சென்றனர். அங்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் கெஜ்ரிவாலை திடீரென கைது செய்துள்ளனர். இது டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மேலும் கைது செய்யப்பட்டாலும் அவர் முதலமைச்சராக தொடர்வார் என மாநில சபாநாயகர் அறிவித்துள்ளார்.














