ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில், கடந்த 2018 ஆம் ஆண்டு, தோயா என்ற பெண் படுகொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் குற்றவாளியாக இந்தியாவைச் சேர்ந்த ராஜவீந்தர் சிங் கண்டறியப்பட்டார். அவரைத் தேடி வந்த ஆஸ்திரேலிய காவல்துறை, சில தினங்களுக்கு முன் அவரைப் பற்றிய தகவல் கொடுப்பவர்களுக்கு ஒரு மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்களை பரிசளிப்பதாக அறிவித்தது. இது தொடர்பாக இந்திய காவல்துறையின் துணையையும் நாடியது.
அதன்படி, சிபிஐ, இன்டர்போல் மற்றும் இந்திய சிறப்பு தனிப்படை ஆகியவை இணைந்து ராஜவீந்தர் சிங்கை கைது செய்துள்ளனர். ஜி டி கர்னல் சாலையில் அவர் இன்று கைது செய்யப்பட்டார். அவர் பெயரில் பிடிவாரண்ட் வழங்கப்பட்டுள்ளது. சட்டப்படி அவர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.