Truecaller செயலி நிறுவனத்துடன் டெல்லி காவல்துறை ஒப்பந்தம்

March 15, 2023

சைபர் கிரைம்களைத் தடுக்க Truecaller செயலி நிறுவனத்துடன் டெல்லி காவல்துறை ஒப்பந்தம் செய்துள்ளது. இது குறித்து டெல்லி காவல்துறை சிறப்பு ஆணையர் சஞ்சய் சிங் கூறுகையில், தற்போது இணைய வழி மோசடிகள் அதிக அளவில் நடைபெறுகின்றன. கோவிட் தொற்றுநோய்களின் போது, செல்போன் மூலமாக ஆக்சிஜன் சிலிண்டர்கள், செறிவூட்டிகள், மருந்துகள் மற்றும் கொடிய வைரஸுக்கு சிகிச்சையளிப்பது தொடர்பான பிற அத்தியாவசியப் பொருட்களை விற்பது போன்ற பல மோசடிகள், அரசு அதிகாரிகளின் பெயரில் ஆள்மாறாட்டம் செய்வது தொடர்பான இணைய மோசடி […]

சைபர் கிரைம்களைத் தடுக்க Truecaller செயலி நிறுவனத்துடன் டெல்லி காவல்துறை ஒப்பந்தம் செய்துள்ளது.

இது குறித்து டெல்லி காவல்துறை சிறப்பு ஆணையர் சஞ்சய் சிங் கூறுகையில், தற்போது இணைய வழி மோசடிகள் அதிக அளவில் நடைபெறுகின்றன. கோவிட் தொற்றுநோய்களின் போது, செல்போன் மூலமாக ஆக்சிஜன் சிலிண்டர்கள், செறிவூட்டிகள், மருந்துகள் மற்றும் கொடிய வைரஸுக்கு சிகிச்சையளிப்பது தொடர்பான பிற அத்தியாவசியப் பொருட்களை விற்பது போன்ற பல மோசடிகள், அரசு அதிகாரிகளின் பெயரில் ஆள்மாறாட்டம் செய்வது தொடர்பான இணைய மோசடி புகார்களின் போது Truecaller எங்களுக்கு நிறைய உதவியது. அதனை கட்டுப்படுத்தும் விதமாக Truecaller செயலியுடன் டெல்லி காவல்துறை ஒப்பந்தம் செய்துள்ளது.

அதன்படி மோசடி அல்லது பிற பதிவு செய்யப்பட்ட சிக்கல்கள் தொடர்பாக புகார்களை பெற்ற டெல்லி காவல்துறையால் வழங்கப்பட்ட தொலைபேசி எண்களை இனி Truecaller செயலி காண்பிக்கும். எந்த வித புகாரிலும் சிக்காத உண்மையான அழைப்பாளர்களுக்கு பச்சை பேட்ஜ் மற்றும் நீல டிக் வழங்கப்பட்டு இவர்களுக்கு அரசாங்க பேட்ஜூம் வழங்கப்படும். மேலும், செல்போனில் மோசடி அழைப்புகள் வந்ததுமே எச்சரிக்கை அறிவிப்பு வரும் வகையில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu