டெல்லி ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் கும்பமேளா காரணமாக டெல்லி ரெயில் நிலையத்தில் நேற்று இரவு திடீரென பயங்கரமான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. உத்தர பிரதேசம் செல்லும் ரயிலில் ஏற ஒரு நேரத்தில் பயணிகள் முண்டியடித்தனர், இதனால் 18 பேர் உயிரிழந்தனர், இதில் 3 குழந்தைகளும் அடங்கும். இந்த சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு ரெயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தார்.