வாட்ஸ் அப் மூலமாக பேருந்து பயணச்சீட்டு பெறும் திட்டம் டெல்லியில் கொண்டுவரப்பட உள்ளது. டெல்லி அரசாங்கம், டெல்லி மெட்ரோவுடன் இணைந்து இந்த திட்டத்தில் பணியாற்றி வருகிறது.
டெல்லி மெட்ரோவில், கடந்த மே மாதம் முதல், வாட்ஸ் அப் மூலம் பயணச்சீட்டு பெறும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், டெல்லி அரசின் போக்குவரத்து துறை, டெல்லி மெட்ரோவுடன் இணைந்து, நகர பேருந்துகளில் வாட்ஸ் அப் மூலம் பயணச்சீட்டுகளை பெறும் திட்டத்தில் பணியாற்றி வருகிறது. அதன்படி, 965085800 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப்பில் சாட் செய்வதன் மூலம், பயணச்சீட்டுகளை பெறலாம். இதற்கு குறைவான சேவை கட்டணம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கட்டணங்களை யுபிஐ மூலம் செலுத்தினால், சேவை கட்டணங்கள் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.