பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நகரங்களின் பட்டியலில் டெல்லி முதலிடம் பெற்றுள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல் வெளியிட்டுள்ளது. அதில், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நகரங்களின் பட்டியலில் டெல்லியை அடுத்து மும்பையும், பெங்களூருவும் இடம் பெற்றுள்ளன.
மேலும், டெல்லியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஓராண்டில் 40 சதவிகிதம் அதிகரித்துள்ளது. நாட்டில் அனைத்து பெருநகரங்களிலும் நடக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் டெல்லி 32.2 சதவிகித பங்கு வகிக்கிறது. கடந்த ஆண்டு வரை டெல்லியில் தினசரி 2 சிறுமிகள் வீதம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருகின்றனர். தலைநகரில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் கடத்தல், கணவரின் கொடுமை, சிறுமி பாலியல் வன்கொடுமை ஆகியவை அதிக இடம் பிடித்துள்ளன.
சிறுவர்களால் குற்றச்செயல்கள் நடக்கும் அதிகம் நடக்கும் இடங்களில் டெல்லியை தொடர்ந்து சென்னையும் அகமதாபாத்தும் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.