அதானி குழுமத்தின் மீது ஹிண்டன்பர்க் அறிக்கை நிதி முறைகேடு குற்றச்சாட்டுகளை சுமத்தியது. இந்த நிலையில், பிரபல தணிக்கை நிறுவனமான டெலாய்ட், அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் கணக்குகளை ஆய்வு செய்து கருத்து தெரிவித்துள்ளது.
டெலாய்ட் நிறுவனம், அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் நிதி பரிமாற்றத்தில் சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளது. இந்திய சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, அதானி போர்ட்ஸ் நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்கிறதா என்பதில் சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளது. குறிப்பாக, ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத மூன்று நிறுவனங்களுடன் பரிவர்த்தனை உள்ளது. உண்மையில், கணக்குகளை ஆய்வு செய்ததில், அவை தொடர்பில்லாத நிறுவனங்கள் என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. எனவே, அதானி போர்ட்ஸ் நிறுவனத்தை பொறுத்தவரை, தகவல் மறைப்பு சம்பவங்கள் காணப்படுவதாக கூறியுள்ளது. ஹிண்டன்பர்க் அறிக்கையை தொடர்ந்து, அதானி குழுமத்தின் பங்குகள் சரிந்த நிலையில், டெலாய்ட் நிறுவனத்தின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.