தனியார் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட மருத்துவர்களுக்கு அனுமதி வழங்க கோரி தமிழ்நாடு மருத்துவர்கள் நல சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
கடந்த மே 1ம் தேதி முதல் தனியார் வாகனங்களில் காவல்துறை, அரசு ஊடகம், வழக்கறிஞர் உள்ள ஸ்டிக்கர்கள் ஒட்டக்கூடாது என்றும் மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன்படி மீறுபவர்கள் மீது அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மருத்துவர்களுக்கு வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட அனுமதி வழங்க கோரி தமிழ்நாடு மருத்துவர்கள் நல சங்கம் சார்பில் அதன் பொது செயலாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதன் விசாரணையில் மருத்துவர்களுக்கு தனியாக விலக்கு தர சட்டத்தில் இடம் இல்லை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதை அடுத்து மருத்துவர்களுக்கு வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட இடைக்கால அனுமதி வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது