டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரில் முன்னணி வீராங்கனை பிவி சிந்து முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளார்.
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரில், இந்தியாவின் பிவி சிந்து, சீன வீராங்கனையான ஹான் யூவுக்கு எதிராக போட்டியிட்டார். முதல் செட்டை 18-21 என இழந்த பிவி சிந்து, அடுத்த இரண்டு செட்களை 21-12, 21-16 என வென்றுள்ளார். இந்த வெற்றியில் மூலம் பிவி சிந்து காலிறுதிக்கு முன்னேறினார். மேலும் நாளை நடைபெறும் காலிறுதியில், சிந்து இந்தோனேசியாவின் கிரிகோரியா மரிஸ்காவை சந்திக்கவுள்ளார்.