காஷ்மீரில் பயங்கரவாதிகளின் மறைவிடத்தை பாதுகாப்பு படையினர் அழித்தனர்.
காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் ஆண்டன் பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக ராணுவத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்று தேடுதலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை துப்பாக்கியால் சுட்டனர். பின்னர் இரு தரப்புக்கும் கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.
இதையடுத்து அங்கு சோதனை நடத்தியதில் குகை போன்ற வடிவில் இருந்த பயங்கரவாதிகளின் மறைவிடத்தை பாதுகாப்பு படையினர் அழித்தனர்.