வளரும் நாடுகள் முதலீட்டாளர்கள், பணக்கார நாடுகள் மற்றும் மேம்பாட்டு வங்கிகளுடன் இணைந்து இன்னும் பத்து ஆண்டுகளுக்குள் காலநிலை நடவடிக்கைக்காக ஆண்டுக்கு 1 டிரில்லியன் டாலர்களை வெளிப்புற நிதியுதவியாகப் பெற வேண்டும் என்று அறிக்கை ஒன்று கூறுகிறது. அதோடு வருடாந்திர முதலீட்டுத் தேவை 2030ஆம் ஆண்டுக்குள் 2.4 டிரில்லியன் டாலராக மேலும் உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
நம் வளிமண்டலத்தில் ஏற்படும் உமிழ்வைக் குறைக்கவும், மீள்திறனை அதிகரிக்கவும், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்பைச் சமாளிக்கவும், இயற்கையையும் நிலத்தையும் மீட்டெடுக்கவும் நிதி தேவைப்படுகிறது. தற்போதைய முதலீடு சுமார் 500 மில்லியன் டாலர்கள் ஆகும். வளர்ந்த நாடுகளின் அரசாங்கங்களின் மானியங்கள் மற்றும் குறைந்த வட்டி கடன்கள் இன்று ஆண்டுதோறும் 30 பில்லியன் டாலர்களில் இருந்து 2025க்குள் 60 பில்லியன் டாலர்களாக இரட்டிப்பாக வேண்டும்.
எகிப்தில் நடைபெறும் COP27 உச்சிமாநாட்டில் காலநிலை மாற்ற நிதி தொடர்பான பேச்சு வார்த்தைக்கு முன்னதாகவே இந்த அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த உச்சிமாநாட்டின் பிரதிநிதிகள் புதன்கிழமை நிதி விவகாரங்கள் குறித்து பேசுவார்கள் என்று கூறப்படுகிறது