மருதமலை முருகன் கோயிலில் அடிப்படை வசதிகள் ரூ.45 கோடியில் மேம்படுத்தப்படும் என்று பொதுப்பணித் துறைச் செயலர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பொதுப்பணித் துறைச் செயலர் பி.சந்திரமோகன் கூறுகையில், மொத்தம் ரூ.45 கோடி மதிப்பில் கோயில் சாலைகள் மேம்பாடு, அடிப்படை வசதிகள், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்துமிடங்கள், கடைகள், காத்திருப்போர் அறை, மரக் கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்துதர அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்து சமய அறநிலையத் துறை மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, மருதமலை கோயிலை மேம்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.