டெல்லி காங்கிரஸ் தலைவராக இருந்த அரவிந்த் சிங்கிள் லவ்லி ஒன் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து தேவேந்திர யாதவ் டெல்லி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றார்.
வெளி மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த முன்னாள் டெல்லி மந்திரி அரவிந்த் சிங் லவ்லி, ஆம் ஆத்மி கட்சி உடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனை அடுத்து டெல்லி மாநில காங்கிரஸின் இடைக்கால தலைவராக தேவேந்தர் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் கே. சி. வேணுகோபால் அறிவித்துள்ளார். மேலும் தேவேந்தர் நியமனம் செய்யப்பட்டதற்கும், ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணிக்கும் எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏக்கள் நீரஜ், யூகேஷ் நசிப் சிங் ஆகியோரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து விலகி உள்ளனர்.