கேரளாவைச் சேர்ந்த 21 வயது இளைஞர் இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு மென்பொறியாளரை வடிவமைத்துள்ளார். இது மனிதர்களின் கட்டளைகளை புரிந்து கொண்டு மென்பொருள் கோடிங்குகளை உருவாக்கும் மற்றும் கோடிங்கில் உள்ள குறைபாடுகளை கண்டறியும் திறன் கொண்டது. இந்த கருவிக்கு தேவிகா என பெயரிடப்பட்டுள்ளது.
உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு மென்பொறியாளர் கருவி ‘டெவின்’ ஆகும். இதனால் ஈர்க்கப்பட்டு தேவிகா என்ற இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு மென்பொறியாளர் கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. மிகவும் கடினமான மென்பொருள் கோடிங்கை கூட எந்தவித மனித தலையீடும் இல்லாமல் தேவிகாவால் செய்து முடிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றும் டெவலப்பர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது. தற்போதைய நிலையில், பீட்டா பரிசோதனை கட்டத்தில் இருக்கும் இந்த கருவி, அடுத்த 2மாதங்களுக்குள் பயன்பாட்டுக்கு வெளியாகும் என கருதப்படுகிறது.