சதுரகிரியில் பக்தர்கள் இரவு தங்க தடை

மகா சிவராத்திரியை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் பக்தர்கள் இரவு தங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது. இங்கு மாதத்தில் 8 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அதிலும் ஆடி ,தை அமாவாசை நாட்களிலும், மகா சிவராத்திரி அன்றும் சதுரகிரியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். அந்த வகையில் சிவராத்திரியை முன்னிட்டு நேற்று இரவு முதல் சென்னை, திருச்சி, கோவை, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட பல்வேறு […]

மகா சிவராத்திரியை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் பக்தர்கள் இரவு தங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது. இங்கு மாதத்தில் 8 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அதிலும் ஆடி ,தை அமாவாசை நாட்களிலும், மகா சிவராத்திரி அன்றும் சதுரகிரியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். அந்த வகையில் சிவராத்திரியை முன்னிட்டு நேற்று இரவு முதல் சென்னை, திருச்சி, கோவை, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் அங்கு வனத்துறையினர் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு ஒழுங்கு படுத்தி வருகின்றனர். தற்போது மகாசிவராத்திரியை முன்னிட்டு அங்கு 21 வகையான அபிஷேகங்கள் 4 கால பூஜைகள் விடிய விடிய நடைபெறும். ஆனால் இதில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மலை ஏறிய பக்தர்கள் நான்கு மணிக்குள் கீழே இறங்கி வந்துவிட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu