இந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் டிஜிபி சார்பில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையம் டிஜிபி சார்பில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் உதவி ஆய்வாளர் முதல் ஏடிஜிபி வரை உள்ள அதிகாரிகளில் பட்டியல் தயார் செய்து பத்தாம் தேதிக்குள் தலைமை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். தேர்தல் ஆணையத்தால் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளை தேர்தல் பணிக்கு பயன்படுத்தக் கூடாது. அதேபோல் நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ள அதிகாரிகளை தேர்தல் பணிக்கு பயன்படுத்த கூடாது. மேலும் ஓய்வு பெற்று பணி நீட்டிப்பு பெற்ற காவல்துறை அதிகாரிகளையும் பயன்படுத்தக் கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.