தமிழகத்தில் தனியார் விடுதிகளில் தினமும் சோதனை நடத்த டி.ஜி.பி., உத்தரவு

November 4, 2022

மாநிலம் முழுதும் தனியார் தங்கும் விடுதிகளில் சோதனை நடத்தி பதிவேடு உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டும் என டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். சமீபத்தில் கோவையில் கார் குண்டு வெடித்து ஜமேஷா முபின் என்பவர் பலியானார். இவரது வீட்டில் விதவிதமான வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இச்சம்பவத்திற்கு பின் காவல்துறையினரின் கவனம் சமூக விரோத செயல்களை முறியடிப்பதில் திரும்பி உள்ளது. மேலும் இதற்காக உளவுத்துறை பலப்படுத்தப்பட்டு வருகிறது. இத்துறையின் அன்றாட பணிகளில் மாற்றம்செய்வது குறித்தும், மாநிலம் […]

மாநிலம் முழுதும் தனியார் தங்கும் விடுதிகளில் சோதனை நடத்தி பதிவேடு உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டும் என டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்தில் கோவையில் கார் குண்டு வெடித்து ஜமேஷா முபின் என்பவர் பலியானார். இவரது வீட்டில் விதவிதமான வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இச்சம்பவத்திற்கு பின் காவல்துறையினரின் கவனம் சமூக விரோத செயல்களை முறியடிப்பதில் திரும்பி உள்ளது. மேலும் இதற்காக உளவுத்துறை பலப்படுத்தப்பட்டு வருகிறது.

இத்துறையின் அன்றாட பணிகளில் மாற்றம்செய்வது குறித்தும், மாநிலம் முழுதும் மர்ம நபர்களின் நடமாட்டம் மற்றும் குற்றத்தடுப்பு தொடர்பாக குடியிருப்போர் நல சங்கத்தினருடன் காவல்துறையினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதன் அடிப்படையில் பல்வேறு முடிவுகளை எடுத்துள்ளனர். குற்றத் தடுப்பின் ஒரு அங்கமாக மாநிலம் முழுதும் உள்ள தனியார் தங்கும் விடுதிகளில், காவல்துறையினர் தொடர் சோதனை நடத்தி சந்தேக நபர்களின் நடமாட்டம் உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு உத்தரவுகளை டி.ஜி.பி.சைலேந்திர பாபு பிறப்பித்துள்ளார்.

இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறுகையில், தனியார் தங்கும் விடுதிகளில் சோதனை செய்வது காவல்துறையினரின் அன்றாட பணிகளில் ஒன்றாக இருக்க வேண்டும். அங்கு வருகை பதிவேடு தங்கும் நபர்களின் விபரங்கள் முறையாக பதிவு செய்யப்படுகிறதா என ஆய்வு செய்யவேண்டும். சந்தேக நபர்கள் தங்கி இருந்தால் அவர்களை உரிய முறையில் விசாரிக்க வேண்டும். 'சிசிடிவி' கேமராக்கள் தடையின்றி இயங்குகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu