சில்லறைப் பயன்பாட்டுக்கான டிஜிட்டல் கரன்சி நாளை வெளியீடு: ரிசர்வ் வங்கி

November 30, 2022

சில்லறைப் பயன்பாட்டுக்கான டிஜிட்டல் கரன்சியை ரிசர்வ் வங்கி நாளை வெளியிடுகிறது. கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச அளவில் கிரிப்டோ கரன்சி புழக்கம் அதிகரித்து வந்தது. இது மத்திய வங்கிகளின் கட்டுப்பாட்டின்கீழ் வராது என்பதால், பல்வேறு மோசடிகள் நடைபெற்றன. இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி டிஜிட்டல் கரன்சியை உருவாக்கும் முயற்சியில் இறங்கியது. நவம்பர் 1-தேதி மொத்த பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் கரன்சியை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. தற்போது சில்லறை பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் கரன்சி நாளை வெளியிடப்படுகிறது. முதல்கட்டமாக மும்பை, டெல்லி, […]

சில்லறைப் பயன்பாட்டுக்கான டிஜிட்டல் கரன்சியை ரிசர்வ் வங்கி நாளை வெளியிடுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச அளவில் கிரிப்டோ கரன்சி புழக்கம் அதிகரித்து வந்தது. இது மத்திய வங்கிகளின் கட்டுப்பாட்டின்கீழ் வராது என்பதால், பல்வேறு மோசடிகள் நடைபெற்றன. இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி டிஜிட்டல் கரன்சியை உருவாக்கும் முயற்சியில் இறங்கியது. நவம்பர் 1-தேதி மொத்த பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் கரன்சியை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. தற்போது சில்லறை பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் கரன்சி நாளை வெளியிடப்படுகிறது.

முதல்கட்டமாக மும்பை, டெல்லி, பெங்களூரு, புவனேஸ்வரம் உள்ளிட்ட 4 நகரங்களில் செயல்படும் எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி, யெஸ் பேங்க், ஐடிஎஃப்சி பர்ஸ்ட் பேங்க் ஆகிய நான்கு வங்கிகளில் சோதனை அடிப்படையில் டிஜிட்டல் கரன்சி வெளியிடப்பட உள்ளது. டிஜிட்டல் கரன்சியை செல்போன் செயலி வழியாகப் பயன்படுத்த முடியும். ஆஃப்லைனிலும் பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியும். பொதுப் பயன்பாட்டுக்கான டிஜிட்டல் கரன்சி எப்போது வெளியிடப்படும் என்பது உள்ளிட்ட விவரங்களை ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu