திண்டுக்கல் விவசாயிகள் கவலை: கத்தரிக்காய் விலை சரிவு

April 26, 2025

கத்தரிக்காயின் விலை சரிந்து ஒரு கிலோ ரூ.3 முதல் ரூ.5 மட்டுமே கிடைக்கின்றது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையக்கோட்டை, புல்லாக்கவுடனூர், மார்க்கம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் சிம்ரன் வகை நாட்டு கத்தரிக்காய் பயிரிட்டு சிறந்த விளைச்சல் கிடைத்துள்ளது. விவசாயிகள் கூலி தொழிலாளர்களை கொண்டு அறுவடை செய்து, தரம் பிரித்து தங்கச்சியம்மாபட்டி காந்தி காய்கறி சந்தையில் விற்பனை செய்கிறார்கள். தற்போது கத்தரிக்காயின் விலை ஒரு கிலோ ரூ.3 முதல் ரூ.5 மட்டுமே கிடைக்கின்றது. இதனால் விவசாயிகள் அதிக […]

கத்தரிக்காயின் விலை சரிந்து ஒரு கிலோ ரூ.3 முதல் ரூ.5 மட்டுமே கிடைக்கின்றது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையக்கோட்டை, புல்லாக்கவுடனூர், மார்க்கம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் சிம்ரன் வகை நாட்டு கத்தரிக்காய் பயிரிட்டு சிறந்த விளைச்சல் கிடைத்துள்ளது. விவசாயிகள் கூலி தொழிலாளர்களை கொண்டு அறுவடை செய்து, தரம் பிரித்து தங்கச்சியம்மாபட்டி காந்தி காய்கறி சந்தையில் விற்பனை செய்கிறார்கள். தற்போது கத்தரிக்காயின் விலை ஒரு கிலோ ரூ.3 முதல் ரூ.5 மட்டுமே கிடைக்கின்றது. இதனால் விவசாயிகள் அதிக இழப்பை சந்தித்து வருகிறார்கள்.
காந்தி சந்தை வியாபாரிகள் சங்க செயலாளர் ராசியப்பன் கூறியதாவது, மைசூரில் இருந்து கேரளாவிற்கு காய்கறிகள் அதிக அளவில் வருவதால், இங்கு கேரளா வியாபாரிகள் வருவதில்லை. இதனால் விற்பனை குறைந்து, காய்கறி விலை கடுமையாக வீழ்ந்துள்ளது என்றும், திருமணங்கள் மற்றும் திருவிழாக்கள் குறைவதால் தேவை குறைந்துள்ளது என்றும் தெரிவித்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu