சென்னை - பினாங் இடையே நேரடி விமான சேவை

January 20, 2024

சென்னை டி.நகரில் பினாங்கு சுற்றுலா கண்காட்சி நேற்று நடைபெற்றது. இதில் , சுற்றுலாத்துறை அமைச்சர் வாங் ஹான் வாய், மலேசியா சுற்றுலாத்துறை இயக்குனர் ரசாயிடி அப்துல் ரஹீம் பங்கேற்றனர். அப்போது பினாங்கு அமைச்சர் வாங் ஹான் கூறியதாவது, கடந்த ஆண்டை விட பினாங் மாநிலத்துக்கு வரும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 7.2% உயர்ந்துள்ளது. தற்போது 8000 சதுர அடியில் வர்த்தக மையம் பினாங் மாநிலத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. இது 2025-க்குள் திறக்கப்பட உள்ளது. அதேபோல் சுற்றுலா […]

சென்னை டி.நகரில் பினாங்கு சுற்றுலா கண்காட்சி நேற்று நடைபெற்றது. இதில் , சுற்றுலாத்துறை அமைச்சர் வாங் ஹான் வாய், மலேசியா சுற்றுலாத்துறை இயக்குனர் ரசாயிடி அப்துல் ரஹீம் பங்கேற்றனர்.

அப்போது பினாங்கு அமைச்சர் வாங் ஹான் கூறியதாவது, கடந்த ஆண்டை விட பினாங் மாநிலத்துக்கு வரும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 7.2% உயர்ந்துள்ளது. தற்போது 8000 சதுர அடியில் வர்த்தக மையம் பினாங் மாநிலத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. இது 2025-க்குள் திறக்கப்பட உள்ளது. அதேபோல் சுற்றுலா பயணிகளை ஈர்க்க மலேசிய அரசு சார்பில் 2023 டிசம்பர் 1 முதல் 2024 டிசம்பர் 31 வரை 30 நாட்களுக்கான இலவச விசா வழங்கப்பட்டு வருகிறது.

அதோடு மதுரை திருச்சியில் இருந்து மலேசியாவில் உள்ள கோலாலம்பூருக்கு விமானம் இயக்கவும், சென்னையிலிருந்து கோலாலம்பூருக்கு கூடுதலாக விமானத்தை இயக்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது. மற்ற நாடுகளில் இருந்து நேரடியாக 13 விமானங்கள் இயக்கப்படுகிறது. சென்னை, ஷாங்காய், துபாய் ஆகிய நகரங்களில் இருந்தும் நேரடி விமானத்தை இயக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் சென்னையில் இருந்து பினாங்குக்கு நேரடி விமானம் இயக்கப்படும் என்றார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu