சென்னையில் இருந்து இந்தோனேசியாவிற்கு இன்றிலிருந்து நேரடி விமான சேவை தொடங்கப்பட்டிருக்கிறது.
பாடிக் ஏர் நிறுவனம் மூலம் இன்று முதல் சென்னையில் இருந்து இந்தோனேஷியாவிற்கு நேரடி விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் இனி இந்தோனேசியாவிற்கு மலேசியா சிங்கப்பூர் சுற்றி செல்ல தேவை இல்லை. இந்த விமானம் வடக்கு சுமாத்திராவின் குலோனாமு பகுதியில் இருந்து இன்று மாலை புறப்பட்டு இரவு 9:45 மணிக்கு சென்னையை வந்தடையும். அதேபோல் மறு மார்க்கமாக இரவு 11:10க்கு புறப்பட்டு சென்னை சென்றடையும் என்று தெரிவித்துள்ளனர். இது தினசரி விமான சேவையாக உள்ளது.